2022-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளரின் ஆலோசனையின் கீழ் எமது காரியாலயத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினால் 2022 மார்ச் 8ம் திகதி விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் கலகெதர பிரதேச வைத்தியசாலையின் பூரன ஒத்துழைப்புடன் விஷேட மருத்துவ பரிசோதனை நிகழ்வொன்று எமது காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் நவீன காலத்தின் குடும்பப் பராமரிப்பில் மகளிரின் பங்களிப்பு எனும் தலைப்பில் பொது மக்களுக்கான ஒரு விளிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி நிகழ்வானது சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதுல ஶ்ரீ மஹாநாம மற்றும் கலகெதர பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் திருமதி மெனிகே நவரத்ன ஆகியோரால் நடாத்தப்பட்டது.

























